புதுடில்லி: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று கொரோனா குறித்து மீண்டும் உரையாற்றியாதாவது: உறவினர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். யாருக்கும் தெரியாமலே கொரோனா வீட்டில் உள்ளவர்களுக்கு பரவிவிடும்.
காட்டு தீ போல கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவது மிகக்கடினம். கையெடுத்து கும்பிட்டு கேட்டுகொள்கிறேன். நீங்கள் எங்கே இருக்கீறீர்களோ அங்கேயே இருங்கள். கெரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துவருகிறது.
அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தவது 100 சதவீதம் சாத்தியம். இந்தியாவில் உள்ள விஞ்ஞான அறிவைக்கொண்டு கொரோனாவை தடுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த 21 நாட்கள் மக்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்கள் ஊரடங்கை விட தற்போது ஊரடங்கு மிக கடுமையானதாக இருக்கும்.
இக்கால கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறினால் கொரோனா வீட்டிற்குள் நுழைந்து விடும். அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் மக்கள் பொறுமையுடன் ஒத்துழைக்க வேண்டும். கொரோனாவை வல்லரசு நாடுகளாலேயே கட்டுப்படுத்தமுடியவில்லை.